mardi 28 août 2012

முனைவா் இரா. திருமுருகனார்


எடுப்பு

முனைவரின் நூலை முனைந்துபடி! திரு
முருகரின் நூலை முழுதும்படி!
                                 (முனைவரின்)
தொடுப்பு

நினைவினில் நிலவும் தெளிதமிழே! அவர்
கனவிலும் குலவும் கனிதமிழே!
                                 (முனைவரின்)

முடிப்பு

முத்தமிழ் நூல்களை முறைப்படி கற்றவர்! தமிழ்
மொழிப்போர் மறவரில் முதலிடம் பெற்றவர்!
மெத்தவே இசையினில் மேன்னிலை யுற்றவர் - மிக
மென்மையாய் இலக்கணம் சொல்லஈ டற்றவர்!
                                 (முனைவரின்)

ஆட்சியில் தமிழ்வர அரும்பாடு பட்டவர் - புகும்
அயல்மொழி அகற்றிட அறிக்கைகள் விட்டவர்!
மாட்சிமை அன்பால்நம் மனங்களைத் தொட்டவர்-ஆய்வு
மாணவர்க் காகவே தம்முடல் இட்டவர்
                                 (முனைவரின்)

Aucun commentaire:

Enregistrer un commentaire