செம்மொழித் தேனெனும் செந்தமிழ்ச் சீரினைச்
சிந்தையுள் சேர்த்துவைத் தேன்!
சீரொடு திகழ்ந்திடும் நேரொடு மொழிகளில்
சிறந்தவள் தமிழணங் கே!
நம்மொழி அதுவென நம்மின உயிரென
நாளுமே நன்குரைத் தேன்!
நல்லறங் கூறிடுஞ் சொல்லற மிக்குடை
நல்லவள் தமிழணங் கே!
மும்மொழி பிரிவுள முத்தமிழ் அன்னையை
முக்கனி போல்சுவைத் தேன்!
முடியுடை வேந்தரின் மடியிலே முத்தென
முகிழ்த்தவள் தமிழணங் கே!
இம்மொழிக் கிணையென எம்மொழி யுண்டென
இயம்புக எனப்பகன் றேன்!
இனிக்கவும் செய்குவள் மணக்கவும் செய்குவள்
என்னுயிர்த் தமிழணங் கே!
Aucun commentaire:
Enregistrer un commentaire