mardi 28 août 2012

இலக்கணச்சுடா் திருமுருகா


எடுப்பு

செந்தமிழ்ச் செல்வமே! திருமுருகா! உன்
சந்தமே இசைதரும் பெரும்பரிசா!
                                  (செந்தமிழ்)

தொடுப்பு

சிந்துகள் பாடிடச் செய்த..நூல் அருமை! உன்
சிந்தனை யாவிலும் நந்தமி;ழ்ப் பெருமை!
                                  (செந்தமிழ்)

முடிப்புக்கள்

சூடிடச் சூடிடத் தூமலர் கசங்கும்! - இங்குத்
தோதிலா அயல்மொழி உனைக்கண்டு பொசுங்கும்!
பாடிடப் பாடிடப் பண்ணிசை வழங்கும் - உனை
தேடிடத் தேடிடத் தெளிதமிழ் முழங்கும்!
                                  (செந்தமிழ்)

இலக்கிய எண்ணங்கள் இயற்றிய தலைவா! தமிழ்
இலக்கணம் இனித்திடும் என்றநற் புலவா!
தலைக்கணத் தலைகளைத் தட்டிய தமிழா! - இன்று
தவிர்த்திட எங்களை விட்டதேன் முருகா
                                   (செந்தமிழ்)

Aucun commentaire:

Enregistrer un commentaire