mardi 28 août 2012

தமிழரின் கடமை



 
தமிழைப் படிப்பதே தமிழரின் கடமை - அதில்
தவறி நடப்பதோ தனிப்பெரு மடமை
                                       (தமிழை)

அமிழ்தென இனிப்பதோ அருந்தமிழ் ஒன்றே
அதற்கிணை உலகினில் வேறில்லை இன்றே
                                       (தமிழை)

இலக்கணச் செறிவுடன் இருப்பதும் தமிழே
ஈடிலாக் குறளினால் சிறப்பதும் தமிழே
இலக்கிய மலர்களால் மணப்பதும் தமிழே
எழில்மிகும் திருவருட் பாவும்நற் றமிழே
                                       (தமிழை)

காப்பியம் ஐந்தினைக் கண்டதும் தமிழே
கம்பனின் கற்பனை வளமதும் தமிழே
மூப்பிலா அகம்;;புறம் உள்ளதும் தமிழே
முத்தமிழ் எனும்பெயர் பெற்றதும் தமிழே
                                       (தமிழை)

Aucun commentaire:

Enregistrer un commentaire