mardi 23 juillet 2013

ஓம் குருநாதா!




ஓம் குருநாதா!

எடுப்பு

ஓம் குருநாதா சரணம் அய்யா
உயிரினும் மேலாம் கீதா நந்தா!....ஓம்

தொடுப்பு

தனக்கென வாழாத் தனித் தலைவா!
தன்னிகர் இல்லாக் கீதா நந்தா!
புனிதமாம் யோகக் கலையிலே உயர்ந்தாய்!
போற்றும்அட் டாங்க யோகியாய்ச் சிறந்தாய்!...ஓம்

முடிப்பு

துணிச்சலை மனத்திடைத் துணையெனக் கொண்டாய்!
தூய்மையாய் அறநெறி தொடர்ந்திட நின்றாய்!
பணிவுடன் பக்தியைப் பரப்பியே சென்றாய்!
பண்புடைச் செல்வமே என்குரு நாதா!...ஓம்

புதுவையின் அரிமா எனும்பெயர் பூண்டாய்!
பொன்மனச் செம்மலே புதுமைகள் புரிந்தாய்!
மதுரமாம் தமிழையும் மணக்கவே இருந்தாய்!
மாசிலாச் சுவாமி சற்குரு நாதா!...ஓம்

Aucun commentaire:

Enregistrer un commentaire