கவிதைக் காவலன்
எடுப்பு
கன்னல் கவிவடித்த கண்ண தாசனே - உயர்
கற்பனைக் கடல்குளித்த கம்ப நேசனே!
(கன்னல்)
தொடுப்பு
வண்ணம் பலதொடுத்த கவிதை மன்னனே - நல்ல
பண்ணில் மதுகலந்த காதல் கண்ணனே!
(கன்னல்)
முடிப்பு
ஒப்பிலாத் திரையிசையில் ஒளிர்ந்தவன்..நீ
- கவி
ஓதுவார் உள்ளத்துள் பொலிந்தவன் ..நீ!
தப்பிலாக் குறள்விளக்கம் மொழிந்தவன்..நீ
- இங்குத்
தண்டமிழ் அமுதினையே பொழிந்தவன்..நீ!
(கன்னல்)
காதல்தரும் இசையினிலே கமழ்ந்தவன்..நீ
- கற்
கண்டெனக் கவியெழுதி மகிழ்ந்தவன்..நீ!
போதைதரும் சீர்களையே புனைந்தவன்..நீ -
நாளும்
பொன்மழைத் தமிழினிலே நனைந்தவன்..நீ!
(கன்னல்)
01.04.2014
வணக்கம்!
RépondreSupprimerசொக்குப் பொடியுடைய சொற்கலந்து பாப்படைத்தார்!
திக்கெட்டும் செந்தமிழ்த் தோ்விடுத்தார்! - செக்குச்
சுழல்வதுபோல் சுற்றுகிறேன்! இன்கண்ண தாசா்
குழலிசைப் பாவைக் குடித்து!